நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, மே 20, 2011

நீயில்லாத பயணங்களில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நீயில்லாத பயணங்களில்
கடும் குளிரால்
விறைத்துப் போகின்றேன்

சோதனைச் சாவடிகளில்
நிறுத்தப்படும் பேருந்தில்
எரிச்சலுடன் நடத்தப்படுகிறது
வெடிகுண்டுச் சோதனைகள்

பயத்துடன்
நடுநிசியில் இறங்கி
இருளில் தள்ளாடி
பொதியைச் சுமந்தபடி
இடித்து, இலக்கின்றி
நான் நகர்ந்து செல்கையில்…

தனிமைப் பயணமே உத்தமம்
குளிரின் கொடுமையை விட…

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
தமிழ் மனம், இன்டலி, திரட்டி போன்ற தளங்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

alex paranthaman சொன்னது…

நன்றி தோழரே,

முதலாவது நபராக வருகை தந்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்தைப் பகிர்ந்து சென்றுள்ளீர்கள்

நன்றிகள்
மன்னார் அமுதன்