நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

திங்கள், மார்ச் 11, 2013

இராத்தங்காத ஓர் இரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஏழை குழந்தைக்கு
உணவு

எதிர்வீட்டு கிழவிக்கு
இளைப்பென

எதுவந்தாலும்
எங்கேனும் சுற்றி
இறுதியில் வருவது
அவளிடம் தான்

ஊரே உலகமாயிற்று
அவளுக்கு
உலகமே அவளாயிற்று
ஊருக்கு

எது எப்படியாயினும்
எல்லோர் வீட்டிலும்
பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

அவள் இராத்தங்காத
அந்த ஒரிரவைப் பற்றி மட்டும்
                  -- மன்னார் அமுதன்

4 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

இராய செல்லப்பா சொன்னது…

நல்லது எது செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் உலகம், நம்முடைய தீயதை மறக்கத்தயாரில்லை என்பதை அழகாகச் சித்திரித்துள்ளீர்கள். –கவிஞர் இராய. செல்லப்பா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/3_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

வலைச்சர தள இணைப்பு : வீழ்வேனென்று நினைத்தாயோ ?!