நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, அக்டோபர் 29, 2010

“தமிழ் செம்மொழி விழா -2010” – கவியரங்கக் கவிதை


தமிழ் செம்மொழி விழா – 2010 மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டு 22,23,24,25 /10/2010 ஆகிய தினங்களில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இயல், இசை, நாடக விழாக்களும் மற்றும் பல ஆய்வரங்குககளும் சிறப்பாக நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இத்தமிழ் நிகழ்விற்கு இலங்கை தேசிய ஊடகங்கள் அனைத்தும் தமது பங்களிப்பை நல்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது வரை வட மாகாண இலக்கிய விழாக்களை மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இரண்டு முறை முன்னெடுக்கப் பட்ட போதும், சில அரசியல் தலையீடுகளால் இந்நிகழ்வுகள் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டன.

முற்று முழுதான மன்னார் மக்களின் பங்களிப்புகளோடு நடைபெற்ற இத்தமிழ் நிகழ்வினால் மன்னார் மக்கள் மிகுந்த மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டை ஆரம்பித்து வைத்த அருட்பணியாளர்தனிநாயகம் அடிகளாரின் வழியினைப் பின்பற்றி தமிழ் வளர்ச்சியில் தன்னை அர்பணித்துள்ளதாக மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்பனியாளர் தமிழ்நேசன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வு ஒரு கூட்டு முயற்சி என்றும், தமது மேலான பங்களிப்பை நல்கிய மன்னார் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

கவிஞரும், நாவலாசிரியருமான அகளங்கன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் எனக்கும் பங்கு பற்றும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “ஆதலினால் தமிழ் மேல் காதல் கொள்வீர்” எனும் கவியரங்கத் தலைப்பில், நான் முன்மொழிந்த எனது கவிதையை இங்கு காணலாம்.

கவிதையின் காணொளி: