நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, மே 20, 2011

நீயற்ற தனிமைப் பயணத்தில்…

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மலையகத்தின்
உறை குளிரில்

தோள்களில் சாய…
கைகளைப்
பிணைத்துச் சூடேற்றி…
தலைமுடி கோதி
காதருகே முடி சுழற்றி

காதலோடு
கழுத்தில் முத்தமிட…
எவரும் இங்கு தயாரில்லை

இடையிடையே
நாசி தொடும்
மண் மணத்தில்
உனை நினைக்க

நாம் உச்சரிக்க மறந்த
வார்த்தைகளை மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறது
நம் காதல்

0 கருத்துகள்: