நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

திங்கள், ஜூலை 04, 2011

பருவமெய்திய பின்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

The greatest thing a father can do to his children, is to love their mother. 
                                                  - Anjaneth Garcia Untalan


பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்

வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா

மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..

முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு

துக்கம் தாளாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா

யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா

இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை

5 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.

alex paranthaman சொன்னது…

நன்றி ஐயா

nishan சொன்னது…

யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா) etheil mama anpathi thaverthu erukkalam.. ankaludiya (srilankan tamil) kalasaraththel ethu porunthathu,,anpathu annidiya karuththu,, peli anral mannikkavum

alex paranthaman சொன்னது…

//வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா//

நமது கலாச்சாரத்தில் தான் பக்கத்து வீட்டுப் பெரியவர்களைக் கூட முறை சொல்லி அழைக்கிறோம்... இங்கு மாமா என்பது இரத்த உறவு முறையைக் குறிக்கவில்லை என்பதை கருத்தில் எடுக்கவும்... இது அடுத்த வீட்டு மாமா.. கருத்திற்கு நன்றி தோழரே

சமுத்ரா சொன்னது…

நல்ல கவிதை.