நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

வெள்ளி, ஜூன் 24, 2011

சாய்ந்தமருதில் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வுகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சாய்ந்தமருது “லக்ஸ்டோ” அமையமும், “தடாகம்” கலை இலக்கிய வட்டமும் இணைந்து மாபெரும் ஒருநாள் கலை இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை5.00 மணி வரை கமு/அல் ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் மருதூர் அன்சாரின் தொகுப்பில் 26 கவிஞர்கள் இணைந்து வெளியிடும் “உன்னை நினைப்பதற்கு” எனும் கவிதை நூலும் சப்னா அமீனின் “நிலாச்சோறு” எனும் கவிதை நூலும் வெளியிடப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறப்புக் கவியரங்கமும் இடம்பெற உள்ளன.தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெற உள்ள இக்கவியரங்கில் வெவ்வேறு கவியடிகளில் கவிமணி என்.நஜ்முல் ஹுசைன், கிண்ணியா அமீர் அலி, யாழ் அஸீம், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, கவிஞர் அஸ்மின், எஸ்.ஜனூஸ், மன்னார் அமுதன், ஏ.சி.ராஹில், சுகைதா ஏ.ஹரீம், தர்பா பானு ஆகிய கவிஞர்கள் கலந்து சிற்ப்பிக்க உள்ளனர்.

மேலும் கலை, இலக்கிய ,சமூக, ஊடகத் துறையில் சாதித்தவர்களுக்கான லக்ஸ்டோவின் கெளரவிப்பும்,தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "அகஸ்தியர் விருது" வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளன."வானொலிக் குயில் " ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவுள்ளார்.


கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்:
நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு:-
ஏ.எல்.அன்ஸார்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
எஸ்.ஜனூஸ்
பி.எம்.ரியாத்

1 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.