திங்கள், மார்ச் 11, 2013
இராத்தங்காத ஓர் இரவு
லேபிள்கள்:
மன்னார் அமுதன்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வியாழன், பிப்ரவரி 28, 2013
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்
ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு
ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்
விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்
ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை
ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன
பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு
இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
--மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
வெள்ளி, பிப்ரவரி 22, 2013
பேயோன்
தலைவலியோடு எழும்போதே
பேயைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தான்
கண்கள் சிவத்தும்
நரம்புகள் புடைத்தும்
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்
பேயடித்ததால்
வீங்கிக் கிடக்கிறது
சோற்றுப் பானையும்
மனைவியின் முகமும்
ஆறொன்று
ஓடி மறைந்த வடுவாய்
காய்ந்திருந்தது
பேய் கழித்த சிறுநீர்
வெட்டியெடுத்த மண்போட்டு
மறைக்கப்பட்டிருந்தது
அதன் வாந்தி
வந்ததற்கான
எல்லா அடையாளங்களையும்
விட்டே சென்றிருந்தது பேய்
அலங்கார அறையொன்றில்
பேயைக் காட்டுவதாய்
அழைத்தான்
அங்கு பேயுடைத்த
கண்ணாடிச் சில்லுகளில்
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது
எனது முகம்
-- மன்னார் அமுதன்
லேபிள்கள்:
கவிதைகள்,
மன்னார் அமுதன் கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)